பேரருள் தரும் அழகிய சதுரகிரி அனுபவப் பதிவுகள் பகுதி 1 – ஒரு புத்தகம்… ஒரு அழைப்பு… ஒரு பயணத்தின் தொடக்கம்
பேரருள் தரும் அழகிய சதுரகிரி அனுபவப் பதிவுகள் பகுதி 1 – ஒரு புத்தகம்… ஒரு அழைப்பு… ஒரு பயணத்தின் தொடக்கம் கடந்த 2020ஆம் ஆண்டு, நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பழைய புத்தகங்கள் விற்கும் இடத்திற்கு சென்றேன். அப்போது பல புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்று, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய “சொர்ண ரகசியம்” என்ற நாவல். அந்த புத்தகத்தை வாங்கியபோதும், அதை உடனே படிக்கவில்லை. வாங்கிய பல புத்தகங்களுடன் சேர்த்து, இரண்டு ஆண்டுகள் படிக்காமல் வைத்திருந்தேன். ஒருநாள் எதேச்சையாக, இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது தான் “சொர்ண ரகசியம்”. அதன் முதல் பக்கத்தைப் படிக்கத் தொடங்கியவுடன், “இது நமக்காகவே வந்த புத்தகம்” என்ற ஒரு ஆழ்ந்த உணர்வு எனக்குள் தோன்றியது. அந்த உணர்வோடு, ஒரே மூச்சில் அந்த முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன். ஆஹா! என்ன ஒரு அற்புதமான எழுத்து! சதுரகிரியைச் சுற்றிய பல ஆன்மீக அம்சங்களை இணைத்து, ஒரு அதிசயமான கதையை எழுதியிருந்தார் இந்திரா சௌந்தரராஜன். அந்த புத்தகத்தை முடித்த அடுத்த கணமே, எ...